tamilnadu

img

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மாத உதவி தொகை வழங்க கோரிக்கை

விழுப்புரம், செப்.21- இளம் வழக்கறிஞர்க ளுக்கு மாத உதவி தொகை  வழங்க வேண்டும் என்று  அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில்  நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மாநில செயல் தலைவரும், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான ஏ. கோதண்டம் தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.சிவக்குமார், துணைத் தலை வர் ஏ.சங்கரன், துணைச்  செயலாளர் கே.பாண்டீஸ் வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் வி.கதிரேசன் வர வேற்றார்.

சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி து. அரிபரந்தாமன் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் என்.மனோஜ்குமார், சங்கத் தின் அகில இந்திய செய லாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான ஆர்.ராமமூர்த்தி, அகில இந்திய பொருளாளர் ஜி.சம்கிராஜ், இணைச் செய லாளர் கே.இளங்கோ, விழுப்புரம் பார் அசோசியே ஷன் தலைவர் கே.மாரி முத்து, செயலாளர் எம்.பி. சிவக்குமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலை வர்கள் கே.பி.ஸ்ரீதர், கோவிந் தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினர், மாநில  பொதுச்செயலாளர் என்.முத்துஅமுதநாதன் தீர்மா னத்தை விளக்கி பேசினார். மாநாட்டில் வழக்கறிஞர்கள் ஆர்.கண்ணப்பன், சே.அறி வழகன், பிரகாஷ் உட்பட ஏரா ளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் எம்.கே.முருகன் நன்றி கூறினார். மாநாட்டில் இளம் வழக்க றிஞர்களுக்கு கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநி லங்களில் வழங்குவது போல்  உதவி தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.